2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சூதாடிய எண்மர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, நாவற்சோலைக் கிராமத்தில்; சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் 08 பேரை இன்று திங்கட்கிழமை    அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த 08 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில்   இவர்களை ஆஜராகுமாறும் பொலிஸார் உத்தரவிட்டனர்.

வீடொன்றில் சூதாடுவதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது நாவற்சோலை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இச்சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .