2025 மே 22, வியாழக்கிழமை

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிய சிறுவனை மீண்டும் ஒப்படைக்குமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                

சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்து தப்பிச்சென்ற 16 வயதுடைய சிறுவன் ஒருவனை மீண்டும் அச்சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க உத்தரவிட்டார்.

கெப்பித்திப்பொல சிறுவர் இல்லத்தில் இருந்த இந்தச் சிறுவன் கடந்த சனிக்கிழமை (23) அங்கிருந்து தப்பிச்சென்று, தலைமறைவாக கந்தளாய்ப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த நிலையில் திங்கட்கிழமை (25) மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டான். கந்தளாய் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (26) இந்தச் சிறுவனை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .