Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் மர்மமான சிறுவர் வன்புணர்வு மற்றும் படுகொலைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கக் கூடிய விசேட நீதி மன்றங்களை நிறுவ வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா உக்குளான் குளத்தில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் சம்பவத்தை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இலங்கையில் தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகள் அதிகமாக இடம் பெற்று வருகின்றது. மேலும் ஆண்டுக்காண்டு இந்தத் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 04 ஆண்டுகளில் 02 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'இதில் 2013ஆம் ஆண்டு 691 முறைப்பாடுகளும் 681 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 228 சம்பவங்களும் 259 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தள்ளார். இவை அனைத்தும் வெளிசத்துக்கு வந்த பாதிகளே. ஆயினும் வெளியுலகுக்கு தெரியாமல் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் ஏராளம். இந்நிலையில் தற்போது பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதுடன், தமது வாழ்விடமான வீட்டையும் வீட்டுச் சூழலையும் கூட நம்பி பிள்ளைகளை விட்டச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான செயற்பாடு தொடர்பாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு மிக விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago