2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மண் அகழ்வு: மூவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஜனவரி 23 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

 

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப் பிரதேசத்தில், அனுமதிப்பத்திரம் இன்றி மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் சுசித்த தம்மிக, நேற்று உத்தரவிட்டார்.

சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் குறித்த மூவரும் கந்தளாய் சூரியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .