2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை அறுத்தவர்களுக்கு பிணை

Princiya Dixci   / 2017 ஜனவரி 07 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை அறுத்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட ஐவரும் நேற்று (06) மாலை, தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கிண்ணியா பிரதேசத்தில் நேற்றுக் காலை, மாடுகளை அறுத்துக்கொண்டிருந்த போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுவை செய்யப்பட்ட எட்டு மாடுகளும் கைப்பற்றப்பட்டிருந்தாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஐவரும் நேற்று திருகோணமலை நீதிமன்றத்தில் திருகோணமலை மேலதிக நீதிபதி திருமதி இரத்னாயக்க முன்னிலையில் கிண்ணியா பொலிஸாரினால் தெரிபடுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X