Editorial / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் முதலீடு செய்யும் வகையிலும், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், குறித்த சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், மூதூர் சம்பூர் பகுதிக்கு நேற்று (05) விஜயம் மேற்கொண்டு, அங்கு முதலீடு செய்து, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பில், கள ஆய்வை மேற்கொண்டனர்.
இந்தக் கள விஜயத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், செயலாளர் எம்.ஹில்மி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago