Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா மத்திய பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த அப்துல் பரீத்- இஹ்ஸானா பரீத், இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் சட்டத்தரணியாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அண்மையில் கடந்த 08ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இவர், கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கலைப்பிரில், திருகோணமலை மாவட்டத்தில் அதி கூடிய சித்தியைப் பெற்று, யாழ். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி, அங்கு சட்டமானி பட்டத்தை பூர்த்தி செய்து கொண்டார்.
இவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) எஸ்.ரீ.கபூர் நிஸா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியுமாவர்.
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago