Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பைஷல் இஸ்மாயில்
திருகோணமலை, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யுமாறும் தரம் உயர்த்துமாறும் கோரிய சந்திப்பொன்று, திருகோணமலை கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (24) மாலை இடம்பெற்றது.
வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கினங்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கும் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பழைய வைத்தியசாலைகளில் ஒன்று தோப்பூர் வைத்தியசாலையாகும். இங்குள்ள மக்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெறுவதாக இருந்தால் பல கிலோமீற்றர் தூரமுள்ள மூதூர் வைத்தியசாலைக்கோ அல்லது திருகோணமலை வைத்தியசாலைக்கோ செல்லவேண்டிய சூழ்நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போக்குவரத்துப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.
இது மாத்திரமல்லாமல் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையாகவும் தாதியர்கள் இல்லாத நிலைமையும் அங்குள்ளது.
அண்மைக்காலமாக பல வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டும் அபிவிருத்தி செய்யப்பட்டடும், வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களையும் வழங்கி வருகின்றீர்கள். தோப்புர் கிராம மக்கள் கடந்த யுத்த காலங்களில் பல வகையான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்ததையும் அமைச்சராகிய நீங்கள் அறிவீர்கள்.
யுத்தகாலத்திலும் நாங்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளோம், இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதே நிலைமையைத்தான் அனுபவித்து வருகின்றோம். இந்நிலைமை தொடர்ந்தும் இடம்பெறாமல் இதற்கான நடவடிக்கைகளை செய்துதருமாறும் கோருகின்றோம்.
இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கருத்துத் தெரிவிக்கையில்,
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தோப்புர் வைத்தியசாலை தொடர்பான அங்கிகாரத்தைப் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றதன் பின்னர் குறித்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்ததுடன், எதிர்வரும் மார்ச் மாதம் மேலதிகமாக ஒரு வைத்தியரையும் இரு தாதியர்களையும் நியமித்து தருவதாகக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago