2025 ஜூன் 25, புதன்கிழமை

திருகோணமலையில் மூடு பனி: சிறுவர்களுக்கு காய்ச்சல்

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்              

திருகோணமலை மாவட்டத்தில் அதிகமாக பெய்து வருகின்ற பனி காரணமாக, மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களும் காய்ச்சல், தடிமல், இருமல் போன்ற நோய்கள் ஏற்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை எட்டு மணி வரையும், மூடு பனி ஏற்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில், காலை வேளைகளில் அதிகளவான பனி காணப்படுவதாகவும் எதிரே வருபவர்களைக் கூட காண முடியாத அளவுக்கு இனங்காண முடியாத அளவுக்கு பனி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நோய் ஏற்படுவது குறித்து, கந்தளாய் தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கொஸ்தாவிடம் வினவிய போது, 'திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில், நாளாந்தம் 12 வயதுக்கு கீழ் பட்ட சிறுவர்கள், நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளிநோயாளர் பிரிவில் அதிகமான பெரியவர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருகின்றனர். இந்த பனியில் இருப்பதையோ அல்லது அதிகநேரம் வெளியில் இருப்பதையோ தவிர்ப்பதன் மூலம் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் தலைக்கு குள்ளாத் தெப்பி அல்லது வேறு தொப்பிகளை வைத்துக்கொண்டு வெளியில் செல்வது சிறந்ததாககும்' என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .