2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

திருட முற்பட்ட சிறுவன் சிறுவர் பராமிரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புகாரி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைச்சேனைப் பிரதேசத்தில் வீடொன்றை உடைத்த உட்புகுந்து நகைகளை திருட முற்பட்ட பதினைந்து சிறுவனை எதிர்வரும் 28ஆம் திகதி வரை திருகோணமலை,வரோதய நகரிலுள்ள சிறுவர் பராமிரிப்பு நிலையத்தில் மூதூர் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக ஒப்படைக்குமாறு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜ.றிஸ்வான் இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுவன் திங்கட்கிழமை(14) மாலை 4.00 மணியளவில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பொருட்களை திருட முற்பட்ட வேளையில் வீட்டுக்கு வந்த உரிமையாளர் வீட்டினுள் சென்று பார்த்த போது அலுமாரி திறக்கப்பட்டு அலுமாரியினுள் பூட்டி வைக்கப்பட்ட நகைகள் சிதறிக்கிடந்துள்ளதை கண்டுள்ளார்.

இதையடுத்து கதவு மூலையில் மறைந்திருந்த சிறுவனை மடக்கிப்பிடித்து மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கைது செய்யப்பட்ட சிறுவனை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,எதிர்வரும் 28ம் திகதி வரை திருகோணமலை வரோதய நகரிலுள்ள சிறுவர் பராமிரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் இந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்து யாராவது  செயற்பட்டார்களா என்பதை விசாரணை செய்து அது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .