2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் 2,416பேருக்கு இலவச சட்ட உதவிகள், ஆலோசனைகள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் 2,416 பேர் இலவச சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் நிலைய சட்ட பொறுப்பதிகாரியும் சட்ட உத்தியோகஸ்தருமான அனஸ் ருக்ஷானா பானு, இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மாதாந்தம் 15,000 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறுவர்களில் சட்ட உதவி தேவைப்படுவோருக்கு இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் நிலையத்தினூடாக இலவச சட்ட உதவிகளையும் சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் விழிப்புணர்வு, பயிற்சிப்பட்டறை, நடமாடும் சேவை ஆகியவற்றுடன் நீதிமன்ற இலவச வழக்கு நடவடிக்கைகளையும் தமது நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டுள்ள 40 விழிப்புணர்வுக் கருத்தரங்குகளிலும் 07 சட்டப் பயிற்சிப்பட்டறைகளிலும்  மேற்படி 2,416 பேர் பங்குபற்றி நன்மையடைந்துள்ளனர். இவற்றின்போது காணிச் சட்டம், குடும்பச் சட்டம், அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள், மத்தியஸ்த சபைக்கான சட்டம் போன்றவை தொடர்பில் அடிப்படை விளக்கமளிக்கப்பட்டன.  

பொதுமக்கள், மாணவர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், மகளிர் சங்க அங்கத்தவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூதாயம் சார் நிறுவன உத்தியோகஸ்தர்கள்;, கள அமைப்பில் பணியாற்றுவோர்,   தாதிகள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சமூர்த்தி வறுமை ஒழிப்புத்திட்டப் பயனாளிகள், மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் இவற்றில் பங்குபற்றினர்.

மேலும், காணாமல் போனோருக்கான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அமர்வில் அவதானிகளாகப் பங்குபற்றி பொதுமக்களின் முறைப்பாடுகளை அவதானித்தமை,  பொதுமக்கள் ஆவணங்களை பெறுவதற்கான நடமாடும்சேவை என்பன எமது நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பால்நிலை தொடர்பான வன்முறைகளை தடுப்பதற்கான வலையமைப்பு மற்றும் திருகோணமலைக்கான சட்ட மன்றத்திலும் பங்குகொண்டு சட்டப் பிரச்சினைகளை எமது நிலையம் ஆராய்கின்றது.

இவ்வருடத்தில் நீதிமன்றில் 150 க்கும் அதிகமான வழக்குகளை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின்  மூதூர் நிலையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றது.

அரசாங்கத்தின்; 100 நாள் வேலைத்திட்டத்தில் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்தும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளில் எமது நிலையம் பங்குபற்றியுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையுடன் காணாமல் போனோரின் இறப்புப் பதிவுகளை மேற்கொள்வதற்கான நடமாடும் சேவையும் பிரதேச செயலகங்கள் தோறும் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .