Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
தம்பலகாமம் பிரதேச சபை வட்டார பிரிப்பு தொடர்பாக தமது பரிந்துரைக் கடிதத்தை உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான குழுச் செயலாளருக்கு திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வட்டாரமுறை எல்லை நிர்ணயத்தில்; திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபையின் எல்லைகள் வரும். சிறாஜ் நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு கிராமமான மயில்தீவு கிராமம் பிரிக்கப்பட்டு அல்ஹ்சா நகர் மற்றும் தங்க நகர் கிராமங்களுடன் இணைத்து முள்ளிப்பொத்தானை கிழக்கு வட்டாரத்துக்குள் உள்வாங்கப்படுவதனால், மயில்தீவு கிராமம் தமது பிரதிநிதித்துவத்தை இழப்பதுடன், தமது அபிவிருத்தியிலும் பின்னிற்க வேண்டிய நிலை ஏற்படும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த நிலையை மாற்றுமாறு திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசமாகிய நாம் தங்களிடம் பரிந்துரை செய்கின்றோம்.
தம்பலகாமம் பிரதேச சபை மூவினங்களையும் கொண்டது. இப்பிரதேச சபையானது 10 வட்டார அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 02 தமிழ் வாக்காளர்கள் அதிகமாகவுள்ள வட்டாரமாகவும் 03 பெரும்பான்மையின வாக்காளர்கள் அதிகமாக வாழும் வட்டாரமாகவும் 05 முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக வாழும் வட்டாரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறாஜ் நகர் கிராம சேவகர் பிரிவான அதிமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட பிரதேசம் கடந்த முறை தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளராக இருந்தவரும் இந்த சிறாஜ் நகர் கிராமத்தை சேர்ந்தவரே.
கடந்த காலங்களில் ஒரே கிராம சேவகர் பிரிவில் இருந்து ஒரே சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருந்து பணியாற்றிய இக்கிராமத்தை தற்போது அரசியல் காரணிகளுக்காக பிரிக்கப்பட்டு வேறு கிராம சேவகர்; பிரிவுடன் இணைப்பதனால் இக்கிராமத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இது இணையப்போகும் வட்டாரமான முள்ளிப்பொத்தானை கிழக்கில் உள்ள இன்னுமொரு கிராமம் தமிழர் வாக்காளர்கள் அதிகமாக வாழும் தங்க நகர் கிராமமாகும். அவர்களுடைய பிரதிநிதித்துவத்துக்கும் இந்த வட்டார பிரிப்பு முறையானது தடையாக அமையும். எனவே, இந்த எல்லை நிர்ணய முறையிணை மீள்பரிசீலனை செய்யுமாறு தங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
07 Jun 2025