2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருகோணமலை கடலில் செய்மதியின் உதிரிப் பாகங்கள்

Freelancer   / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்பகுதியில் இந்திய செய்மதியின் உதிரிப் பாகங்கள் உடைந்து வீழ்ந்துள்ளன.

மீனவர் ஒருவர் கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இன்று போலா என்ற செய்மதியை விண்ணில் செலுத்தியது.

அதன் உடைந்த உதிரிப் பாகங்கள் இலங்கை கடற்பரப்பில் தரையிறங்கலாம் என இந்தியாவால் இலங்கை கடற்படைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறான உடைந்த பாகங்கள் சில திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .