Princiya Dixci / 2021 ஜனவரி 24 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
திருகோணமலை நீதிமன்றில் சட்டத்தரணிகளாக செயற்படும் 47 சட்டத்தரணிகளுக்கு கடந்த புதன்கிழமை (20) மற்றும் வியாழக்கிழமை (21) ஆகிய இரு தினங்களில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவுகள், இன்று (24) வெளிவந்த நிலையிலே சட்டத்தரணிகள் எவரும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago