2026 மார்ச் 19, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், திருகோணமலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நாளை ( 30 ) காலை 09 மணிக்கு இடம்பெறவுள்ளதாகத் திட்டமிடல் பணிப்பாளர் பரமேஸ்வரி தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களும் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களுமான  அப்துல்லா மஃறூப், இரா.சம்மந்தன் ஆகியோர்களது இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக, அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் நடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .