2025 மே 01, வியாழக்கிழமை

திருகோணமலையில் தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை, லவ்லேன் பகுதியில் 5 பேரும், ஜமாலியா பகுதியில்  5 பேரும் ஸ்ரீமாபுர பகுதியில் 7 பேரும்,  கிண்ணியா பிரதேசத்தில் ஒருவருமாக 18 பேருக்கு, நேற்று (03) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் வீதித் தடைகள் இடப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் இரவு - பகலாக காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 148 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .