2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருமலையில் 200 பேருக்கு இந்தியா உதவி

Editorial   / 2022 ஒக்டோபர் 02 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமாா்

திருகோணமலைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை இன்று (02) ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டிருக்கும் இந்திய உயஸ்தானிகர்  கோபால் பாக்லே திருக்கோணேஸ்வரா் ஆலயத்திற்கு சென்று தரிசித்ததுடன் ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தின் நகரமண்டபத்திலே இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு 200 பேருக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இதில், திருகோணமலை நகரசபையின் உப தவிசாளர் காளிராஜா கோகுல்ராஜ் மற்றும் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் இந்திய துாதரகத்தின் அரசியல் துறை ஆலோகர் பானு பிரகாஸ் உட்பட நகரசபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கர்கள்,  மதகுருமார் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிட்டத்தகது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .