2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 ஜனவரி 16 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் கல்விக் கற்று, க.பொ.த.உயர்தரத்தில் கற்பதற்காக, சேனையூர் , மூதூர் , இலங்கைத்துறை முகத்துவாரம் மற்றும் பள்ளிக்குடியிருப்பு போன்ற இடங்களுக்குச் சென்று வரும் ஐந்து மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு இணங்க சேனையூர் மத்திய கல்லூரியின் 21ஆவது அணியினரால்
செயற்படுத்தப்படும் நண்பர்கள் கல்வி நலன்புரி அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய குறித்த அமைப்பின் பிரதிநிதியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருமான கோபகன், பாடசாலையின் உப- அதிபர் பா.ரஞ்சித்குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு துவிச்சக்கர
வண்டிகளை வழங்கி வைத்தனர்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .