2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நீரில் முழ்கி இளைஞன் பலி

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

கந்தளாய், பேராறு ஆற்றில் குளிக்கச் சென்ற எம்.எச்.முகம்மது சப்ரீக் (22) என்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், பேராறு -இல  112 / 02 கண்டம் என்ற முகவரியில் வசித்து வரும் மேற்படி இளைஞன், நேற்று  வெள்ளிக்கிழமை (11) ஆற்றுக்கு குளிக்க சென்றிருந்த நிலையில் காணாமல் போய்யுள்ளார். பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையை அடுத்து, இன்று  (12) குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்தியரின் அறிக்கையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .