2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்கவும்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள  பட்டதாரிகள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனைய மாவட்டங்களில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தங்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தங்களின்  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனீஸிடம் பட்டதாரிகள்  கையளித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .