Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
பாதுகாப்புக்கு குந்தகமில்லாத வகையில் பொதுமக்களின் காணிகளை படையினர் விடுவிக்க வேண்டுமென்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை, அரிசிமலைப் பகுதியில் பொதுமக்களுக்கு உரித்தான காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்டோர் ஒருமித்த குரலில் பொதுமக்களின் காணிகள் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தனர்.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட இது தொடர்பான தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago