2026 மார்ச் 23, திங்கட்கிழமை

புதிய நியமனம்

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக ஏ.எம். அகமட் லெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் செவ்வாக்கிழமை (26) கடமைப் பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த இவர், அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரியுரையாளர், கம்பளை ஸாஹிரா கல்லூரி அதிபர், கல்வியமைச்சின் உதவிக் கல்விப் பணிப்பாளர், அக்கறைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாகத்துக்கு பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகிய பாதவிகளை வகித்துள்ளார்.   

அண்மையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது தெரிவு செய்யப்பட்டதையடுத்து அதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெனான்டோ வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .