2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாலையூற்றில் நகைகளும் பணமும் திருட்டு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில்; சுமார் 17 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளும் பணமும் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டில் புதன்கிழமை (11) பகல் எவரும் இல்லாத வேளையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வீட்டில் வசிக்கும் தாம்; மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் யன்னல் ஒன்று உடைக்கப்பட்டிருந்ததையும் நகைகள் திருட்டுப் போயிருந்ததையும் அவதானித்துள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .