2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யபட்ட மாணவர்களுக்கும், அவ்வாண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீPட்சையில் அதிசிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், இன்று (22) புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ரிஷாட் பதியுதீன் பௌண்டேஷன் அனுசரணையில், கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் கிண்ணியா நகரசபையின் முன்னாள் தவிசாளர்  ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்த இந்த வைபவத்தில்,  234  மாணவர்கள் புலமை பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.

இவ் வைபவத்தில் கைத்தொழில்  மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .