2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

படகில் தீ

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன்

திருகோணமலை - கண்டி வீதியில், மட்டிக்களி ஏரியில், மீன்பிடிப் படகு ஒன்றில், இன்று (08) காலை தீ விபத்து ஏற்பட்டமையால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இது தொடர்பில், பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, திருகோணமலை நகரசபையின் தீ அனர்த்தப் பிரிவினர், ஸ்தலத்துக்கு விரைந்து, தீயைக் கட்டுப்படுத்தினர்.

பழுதடைந்த நிலையிலிருந்த இந்தப் படகு, நீண்ட நாட்களாகவே இந்த ஏரிக்கரையில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்ததாகவும் இதில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது அறியப்படவில்லை எனவும் தெரிவித்த திருகோணமலை தலைமையகப் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .