2025 நவம்பர் 05, புதன்கிழமை

படகு கவிழ்ந்ததில் இளைஞன் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 மே 17 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர், இன்று (17) காலை உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், இறக்ககண்டி, வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய துஷ்யந்தன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று இளைஞர்கள் இணைந்து படகில் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் மற்ற இருவரும் உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம், நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X