2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பன்றி இறைச்சி கொண்டு சென்ற கான்ஸ்டபிள் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

38 கிலோகிராம் பன்றி இறைச்சியை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற கான்ஸ்டபிள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகிய இருவரையும், நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, கன்னியாப் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கிச் சென்ற போது மிஹிந்தபுறப் பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஈ.ஜி.ஆர். தரங்க (29) மற்றும் திருகோணமலை - மரத்தடியைச் சேர்ந்த  எம்.துமிந்த (33)  எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை, தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .