Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
அதிக சனத்தொகை செறிவுக்கு ஏற்ப, புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டுமென, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹரூம் தெரிவித்தார்.
புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் திறந்து, மக்கள் பாவனைக்கு நேற்று (10) கையளித்து, உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர், மாகாண சபைத் தேர்தலையே விரைவில் எதிர்நோக்கவுள்ளதாகவும் சரியான திட்டங்களை வகுத்து, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
மக்களுடைய அபிலாஷைகளை வென்றெடுக்க, பல துரிதமான திட்டங்களை துரிதப்படுத்தி, சமூக எழுச்சிக்காக் போராட வேண்டுமென்றும் மாகாண சபைத் தேர்தலில், தங்களுடைய நியாயங்களை உறுதிப்படுத்தி, அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
54 minute ago
1 hours ago