2025 மே 01, வியாழக்கிழமை

போதைப்பொருள்களுடன் இளைஞன் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள கிறீன் வீதி சந்தியில், போதை மாத்திரைகள், கேரளாக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில், 21 வயது இளைஞன்,  திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று  (26) கைதுசெய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 101 போதை மாத்திரைகளும் 10.1 கிராம் கேரளாக் கஞ்சாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

சந்தேகநபரும் இவரிடமிருந்து  கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களும் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .