2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மின்னிணைப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

மூதூர் பிரதேசத்தின் நத்வத்துல் உலமா மத்ரஸாவுக்கான வீதியையும் மையவாடிக்குமான மின்னிணைப்பு மற்றும் மின் கம்பங்களின் வெளிச்ச வசதியையும்  ஏற்படுத்தித் தருமாறு கோரி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது தொடர்பான மகஜர் ஒன்றினைக் கிழக்கு மாகாண சுகாதார, கிராமிய மற்றும் மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்துக் கையளித்தார்.

அம்மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மூதூர் பிரதேசம் பல வழிகளில் பின் தங்கிய பிரதேசமாகும். எந்தவொரு பகுதியும் முழுமையான வளங்களைக் கொண்டதாக அமையவில்லை.அதில் முக்கியமாக மின்சாரம் மற்றும் வீதியை குறிப்பிடலாம்.

அந்த வகையில், இப்பிரதேச மக்களின் நன்மை கருதிக் குறிப்பிட்ட பிரதேசங்களில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மகஜரில் கோரப்பட்டிருந்த விடயங்களைக் கூடிய விரைவில் ஏற்படுத்தித் தருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

இதன்போது,2016ஆம் நிதியாண்டின் ஒதுக்கீடுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .