Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
இறைச்சிக்காக முள்ளம் பன்றியொன்றை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு அதைக் கொண்டு வந்திருந்ததாகக் கூறப்படும் 17 வயதுடைய சிறுவன் ஒருவனை திருகோணமலை, மொறவௌ காட்டுப்பகுதியில திங்கட்கிழமை (02) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சந்தேக நபர் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த காட்டுப்பகுதிக்குச் சென்று சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். இதன்போது, இரும்புக் கம்பி மற்றும் வேட்டையாடப்பட்ட முள்ளம் பன்றியுடன் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago