2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மது போதையில் முச்சக்கர வண்டி செலுத்தியவருக்கு சிறைத்தண்டனை

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புகாரி

சம்பூர் பகுதியில் நேற்று புதன்கிழமை மது போதையில் முச்சக்கர வண்டி செலுத்திச் சென்ற 26 வயது நிரம்பிய ஒருவருக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் இல்லியாஸ் முபாரிஸ் இன்று (10) 5,000 ரூபாய் அபராதமும்  ஒரு மாதத்துக்கு சாரதி அனுமதி பத்திரத்தை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தள்ளார்.

இதேவேளை, அவருக்கு 3 வருடம் ஒத்திவைக்கும் வகையில் ஒரு வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை,சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டடைபறிச்சான்,சம்பூர்,சேனையூர் ஆகிய கிராமகளின் சில வீடுகளில்  சட்டவிரோத கசிப்பு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த ஒருவருக்கு மூதூர் பதில் நீதிவான் இல்லியாஸ் முபாரிஸ் இன்று வியாழக்கிழமை 20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .