2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மனித உரிமைகள் தின நிகழ்வு

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள், நேற்று  வெள்ளிக்கிழமை (11) முன்னம்பொடிவெட்டை கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மேற்படி இரு கிராமங்களிலும் உள்ள இளைஞர் யுவதிகளின்  கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன்  சட்ட உதவி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கணகசூரியம், விஷேட விருந்தினராக மூதூர் பிரதேச செயலகச் செயலாளர் ஜனாப் யூசுப், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .