2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

மனைவியுடன் சண்டையிட்டு வீட்டுக்கு தீ வைத்த கணவன் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட அக்கரைச்சேனை பகுதியில் மனைவியுடன் சண்டை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் 25 வயது ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

திங்கட்கிழமை (04) இரவு மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இவர், ஆத்திரமடைந்து வீட்டுக்குத் தீயிட்டு கொழுத்தியுள்ளார். இதன் காரணமாக வீட்டுக்கூரையும் அவ்வீட்டிலிருந்த பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.

இது தொடர்பில் பொலிஸில் மனைவி முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து கணவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .