2025 ஜூன் 07, சனிக்கிழமை

மனைவியைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மார்ச் 01 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப். முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நகரில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகறாரில் மனைவியைத் தாக்கிய நபரொருவரை, நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.

மனைவியின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரைப் பொலிஸார் கைதுசெய்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்பாடுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .