2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மனைவியை துன்புறுத்தியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                      

மனைவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 30  வயதுடைய ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.                            

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியில் குறித்த சந்தேக நபர் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை திங்கட்கிழமை (08) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்;.      

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .