2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மலேசியாவில் பயிற்சி நெறி

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் இலங்கையில் இருந்து 33 அதிகாரிகள் விசேட பயிற்சி நெறி ஒன்றுக்காக மலேசியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சி நெறி நிருவாகம் அபிவிருத்தி மற்றும் வினைத்திறனும் பரிமாற்றமும் என்னும் தலைப்பில்  10 தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

அபிவிருத்தி தொடர்பான மலேசியாவின் அனுபவங்கள் தெளிவுபடுத்தப்படுவதோடு, களப் பயணங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி நெறிக்கு கலந்து கொள்ளும் அதிகாரிகளில் 5 பேர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த பயிற்சி நெறி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .