2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினருக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினாலேயே, மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “அவர்கள் பெரும்பான்மையைப் பெற எவ்வளவு முயற்சி செய்தாலும் அதை முறியடித்து, நாடாளுமன்றத்தில் பெருமான்மையை நாம் நிரூபிப்போம்” என்றார்.

“அரசமைப்புக்கு முரணான வகையில் நியமிக்கபட்டுள்ள புதிய பிரதமரை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாக ஒன்றிணைந்து, வீட்டுக்கு அனுப்பி, ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .