Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (27) உத்தரவிட்டார்.
கிண்ணியா - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள தி/ இக்ரா வித்தியாலத்துக்கு முன்னால், சைக்கிளில் நேற்று முன்தினம் (26) பாடசாலை விடுகின்ற நேரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த சமயத்தில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் கிண்ணியா , ரியாத் நகரைச் சேர்ந்த 32 வயதான குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து, மூன்று வகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த நபர் ஏற்கெனவே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதற்காக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago