Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீனை, கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு, கிழக்கிலுள்ள சில சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக தமிழ் பேசுகின்ற ஒருவரேயே கிழக்கு நியமிக்க வேண்டுமெனவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக அவர் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுளௌளது.
எனவே, தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் கட்சியின் தலைவர், இன, மத பேதமற்ற ஒருவராகவும் உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முஸம்மில் மொஹிதீன் கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்டதோடு, கிழக்கு மாகாணத்துக்கு பொறுத்தமான நபராக தாம் இவரை நோக்குவதாகவும் குறித்த சிவில் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
9 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago