2025 மே 07, புதன்கிழமை

மூதூரில் மிதிவெடிகள் மீட்பு

தீஷான் அஹமட்   / 2018 மார்ச் 22 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், பட்டியடியிலுள்ள காணியொன்றில், மிதிவெடிகள் இரண்டு, இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளனவென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காணிச் சொந்தக்காரர், பெக்கோ இயந்திரம் கொண்டு, தனது காணியைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது, இந்த மிதிவெடிகள் தென்பட்டதையடுத்து, இது விடயமாக மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்று மிதிவெடிகளைப் பார்வையிட்ட மூதூர் பொலிஸார், நீதிமன்ற அனுமதியைப் பெற்று, விசேட அதிரடிப்படையினரின் அனுமதியுடன், மிதிவெடிகளைச் செயழிலக்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X