2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

யானையினால் வீடு சேதம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் கிராமத்திற்குள் நேற்று திங்கட்கிழமை இரவு உட்புகுந்த காட்டு யானையொன்று, வீடொன்றின் சமையல் அறையையும் தென்னை மரமொன்றையும் சேதப்படுத்தியுள்ளது.

சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் கண் விழித்துப் பார்த்தபோது, சமையல் அறையை யானை உடைத்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், தனது மனைவியையும் 04 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டின் பின் கதவு வழியாக வெளியில் சென்றதாக சேருநுவரப் பொலிஸில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .