Thipaan / 2016 ஜூன் 18 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை, புல்மோட்டையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 250 முஸ்லிம் குடும்பங்களுக்கான ரமழான் உலர் உணவுப் பொதிகள், முஸ்லிம் எய்ட் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் வியாழக்கிழமை (16) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, அஸ்ஸெய்ஹ் எம்.எம்.நதீர் மௌலவி தலைமையில் அறபா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், குச்சவெளி பங்காளி நிறுவனமான, சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பும் இணைந்து கொண்டது.
தலைவர் நஜ்முதீன் மாவட்ட முஸ்லிம் எய்ட் இணைப்பாளர் மஹ்ருப் சம்சுதீன் இணைந்து பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.



4 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Mar 2026