2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வான்கதவுகள் திறப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்கின்ற மழை காரணமாக கந்தளாய்க் குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று வியாழக்கிழமை காலை திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் டபிள்யூ.எல்.விபுல புத்திக்க தெரிவித்தார்.

அத்துடன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடா கல்மெடியாவகுளம் மற்றும் இந்திக்குளம்  ஆகியவற்றின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மழை  பெய்வதினால் நெல்வயல்கள் நீரில் மூழ்குவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .