2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட டிப்பர் வாகனச் சாரதியை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற  நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கங்கைப் பாலத்துக்கு அருகில்  செவ்வாய்க்கிழமை (31) டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூதூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி (வயது 40) பலியானார்.

முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில்; இருந்து பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, டிப்பர் வாகனச் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .