2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர்-பாலநகர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூதூர்-கட்டைபரிச்சான் பகுதியைச் சேர்ந்த முத்துராசா ஜெகதீஸ்வரன் (வயது 34) மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மட்டக்களப்பு-ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த சதக்குலெப்பை மகரூப் (வயது 45) ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X