Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் 17 வயது சிறுமியை காதலித்து, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காதவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா சனிக்கிழமை(23) உத்தரவிட்டார்.
கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டு வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் வழக்குத் தவணைக்கு சமூகமளிக்காததால் கிண்ணியா பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) மாலை அவரை கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago