Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாசிகசாலையொன்று இல்லாமையால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் தினசரிப் பத்திரிகை வாசிப்பதிலும், கல்வி தொடர்பான புத்தகங்களைத் தேடிப் பெற்று வாசிப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
பத்திரிகை பார்க்க வேண்டுமாக இருந்தால் ஆறு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள தோப்பூர் பொது நூலகத்துக்குச் சென்றே பத்திரிகை வாசிக்க வேண்டியுள்ளதாகவும், அத்தோடு, வேலை வாய்ப்புகள் தொடர்பாக பத்திரிகைகளில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற போது, தாம் பல வாய்புகளை இழப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாசிகசாலை அமைத்துத் தர வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago