Freelancer / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை - மூதூரிலுள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள பெண்கள் குழுக்களின் பொறுப்பாளர்களுக்கான “மன அழுத்தத்தை முகாமை செய்தல்” தொடர்பான விழிப்புணர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு மூதூர் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நேற்று (27)இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப்பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர்.ஏ.கே.எம். நஸ்மி வளவாளராக கலந்துகொண்டு விரிவுரையாற்றினார்.
இதன் போது உளநலத்தின் முக்கியத்துவம், போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வை சமூக வளர்ச்சி மற்றும் அமைதிக்கான மையம்( CCDP) சிறப்பாக ஒழுங்குசெய்திருந்தது. (R)
42 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
7 hours ago