Editorial / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிகுமார், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின், தம்பலகாமம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் நேற்று முன்தினம்(09) விசித்திர சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த, பகுதியினூடாக சென்ற பிற்பகல் வேளையில், சென்ற வானிலிருந்து ஒரு தொகை வட்டவடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய தங்கக் கட்டிகளை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையெடுத்த சில இளைஞர்கள் தங்கமா என்று பரிசோதிப்பதற்காக நகைக்கடைக்கு கொண்டுசென்ற போது அது தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இவை பழைய காலத்து தங்கமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையறிந்த பாதசாரிகளும். அப்பகுதி மக்களும் வீசிச் சென்ற தங்கத்தை சேகரிப்பதற்காக வீதியில் குவிந்துள்ளதை காணக்கூடியதாகவிருந்தது.
53 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
5 hours ago